Thursday, March 26, 2009

நல்லா சிரிங்கடே


நம்ம முத்துலெட்சுமி அம்மா ஒரு பதிவு போட்டிருக்காங்க சாருன்னா ச்சோர்(திருடன்)ன்னு "சிறுமுயற்சியில. அது சிறு முயற்சியில்ல பெருமுயற்சி.
நம்ம பிளீச்சிங் பவுடர் தொடக்கி வைத்த சாரு நிந்தனையில் அடுத்த மைல் கல்லுன்னு அடிச்சுப்பிடிச்சு அங்கே ஓடுனா..


"சாருன்ன உடனே நான் வேற ஏதோ இல்ல நினைச்சிட்டேன் ,வந்து பார்த்தா அக்கா சொந்தக் கதை " மிஸஸ் டவுட்டுக்கு வந்த அதே டவுட்டுத்தான் நமக்கும்.

"என்னங்க தலைப்ப பார்த்துட்டு எதோ எதிர்வினை, விவாதம், பின்நவீனத்துவம் இப்படி எதாவது இருக்கும்னு பார்த்தா" வாழ வந்தான் திட்டாத குறைதான்.

"சூடான இடுக்கைக்கு ஒரு இடம் புக் பண்ணுங்கப்பா...நல்ல தலைப்பு ஒன்னு கிடைச்சிருக்கு.." கண்டு பிடிச்சது நான் ஆதவன். நானில்லீங்க அது அவரு.

அதே போல பதிவு ரொம்பச்சூடாயிட்டுது.

நம்ம கதை இனித்தாங்க.. காமெண்ட்ஸ்ஸைஅலசி ஆராஞ்சு போனா நம்ம தெகா ஒரு கதை வுட்டிருக்கார் இப்பிடி..

"ஆமாங்க டெல்லியில ரொம்ப மோசமின்னு நினைக்கிறேன் இந்த மாதிரி விசயங்களைப் கேள்விப் படும் பொழுது. நான் அங்கு ஒரு முறை வந்திருந்த பொழுது இப்படித்தான் ஓடும் ரயிலில் ஜன்னலின் வழியாக கையை விட்டு பெரிய தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இறங்கி விட்டான் ஒருவன், பாவம் அந்த ஜோடிகள் புதிதாக திருமணமான ஆட்கள் போல, பொண்ணு கிட்டத்தட்ட சென்னை வரும் வரையில் நினைத்து நினைத்து ஒரே அழுகைதான்..."

இதை வாசிச்சப்புறம் நமக்கு அழுகை வரலீங்க சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சுங்க..

ஒரு மாதிரிப்பாக்காதீங்க விஷயத்தை சொல்லிப்புடுரேன்.

" ஜன்னலின் வழியாக கையை விட்டு பெரிய சங்கிலியை அறுத்துக் கொண்டு
அவன் ஓட நம்மாளுங்க நாலைஞ்சு பேர் அவனைத் துரத்த ..அவன் ஓடோடென்னு ஓடி இவங்க கண்ணில மண்ணைத்தூவி தப்பிச்சு விட திரும்பி வந்த இவங்க அந்தப்பொண்னு தாலிச்சங்கிலியை எடுத்து கண்ணில ஒத்திறதைப் பார்த்து நொந்து போக சங்கிலியைக் கொண்டு போனவன் சங்கிலியைப்பார்க்க அது தங்கச் சங்கிலி இல்லீங்க ரெயிலின் "அபாயச் சங்கிலி" .

நொந்து நூலாயிட மாட்டான். இப்போ நீங்களும் சிரிங்கடே

(நம்ம அண்ணாச்சியின் நல்லாருங்கடேயில் இருந்து சுட்டது நல்லா சிரிங்கடே.. டாக்டருங்க மன்னிச்சுக்கங்க.. உங்க தொழிலுக்கு இது நஷ்டக் கணக்குத் தான்.. நல்லா சிரிங்கடே)

No comments:

Post a Comment