Thursday, March 26, 2009

கெளபோயின் கனவுகள்

குனிஞ்சுக்க குதிரை ஏறலாம்

உலகையே புரட்டிப்போட்ட அதாங்க 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர் கொண்டு வந்த ஜார்ஜ் புஸ்ஸை உலகம் அவ்வளவு எளிதில் மறக்காது. அவர் நடையும் சிரிப்பும் ரெக்ஸாஸ் குதிரைக்காரன் ஸ்டைல்தான். இரண்டு மாதம் முன்னாடி அவர் ஊருக்கு ஒரு விசிட் அடிச்சேன். சும்மா சொல்லக்கூடாது நம்ம வாகனமும் குதிரைமாதிரித்தான் பாய்ந்து பாய்ந்து போனது. அல்லது நமக்குத்தான் தோணித்தோ என்னவோ.. அது என்னங்க பகலில் ஒரு ஸ்பீட் லிமிட் (70 மைல் பேர் அவர்) இரவில் ஒரு ஸ்பீட் லிமிட் (65 மைல் பேர் அவர்). "இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுதினில் " என்னங்க ஸ்பீட் லிமிட்?

அந்த ஊர் பொலீஸ்காரங்களும் அதே. அதாங்க கெளபோய் டைப்பாத்தான் இருக்காங்க. இரவில் பயணம் மகாரோதனை. வழியெங்கும் வாகனங்களை இரண்டு மூன்று பொலீஸ் கார்கள் வழிமறித்துக்கொண்டிருந்தன. என்னவென்று விசாரித்தால் ..காதைக்கொண்டு வாருங்கள் போடர் ஸ்ரேட்டாம். மஜா அயிட்டமெல்லாம் வழி மாறி தடம் மாறி அமெரிக்க டாலரை அள்ளிக்கிட்டிருக்காம். மஜா அயிட்டம் சத்தியமா பொன்ணுங்க கிடையாது.

ரெக்ஸாஸ் ஸ்ரேட்ஸ் எல்லையில் இருந்து 30 ஏ மைல்கள்தான் ஆர்க்கன்ஸாஸில் இருக்கின்றது நம்ம மதனகாமராஜன் பில்லுடைய பேர்த் பிளேஸ்.இரண்டு பதவிக்காலத்தை ஹுக்கா மொக்கா பண்ணி வந்திருந்தாலும் உலகத்தையே தனியாளா எதிர்த்து (கெளபோய் நெனைப்பு அப்பிடித்தாங்க இருக்கும்)நின்ற துணிச்சலை எப்படிச் சொல்லுவது.

அவர் பேச்சுக்கு ஆமா போட்ட பாவத்துக்கு ரொனி பிளையர் மலரும் நினைவுகளில் மூழ்கி இருக்கும் போதே தனியாக திரில் காட்டியவராச்சே. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேண்டுமே.

நம்ம காக்கா சுடும் துவக்குப்புகழ் சதாம் உசேனை பாதாளத்தில் இருந்து தோண்டியெடுத்து கல்லறைக்கு அனுப்பியது வரை கச்சிதமாகக் காரியம் ஆற்றிய ஈராக்கில் தான் நம்மாளின் கனவுகளில் தொற்றிக் கொண்ட பயங்கரவாதம் விளைந்தது.

நம்ம பாட்டி அடிக்கொருதரம் சொல்லிக் கொள்வாங்க. "தினை விதைச்சவன் தினை அறுப்பான் வினை விதைச்சவன் வினை அறுப்பான்னு".


விதைச்ச தினைக்கு வரவேற்பு

நாம தினையும் விதைக்கல்ல வினையும் விதைக்கல்ல. ஆனா நம்மாள் விதைச்ச பயங்கரவாதம் செருப்பு மூலமா பயங்கரவாதமா திரும்பிச்சில்லே. சதாம் உசேனின் சிலையை முறிச்சுப்போட்ட தைக் காட்டிய அதே டி வி க்கள்லே அதே திக்கிரித் டவுனிலே அதே இடத்தில நம்மாளைத் தாக்கிய செருப்பைக்காட்டினா நம்மாளு நொந்து போகாம என்ன பன்ணுவார்.

எட்டு வருஷ உலக தாதா வாழ்க்கை அது முன்னாடி வாழ்ந்த கெளபோய் வாழ்க்கை, இனி வாழ்ப்போற வாழ்க்கை எல்லாத்தையும் துரத்தப்போறதே இந்த பயங்கரவாதம் செருப்பு வடிவிலே. இனி அவர் வாழ்க்கையில் செருப்பில்லாத கனவு வரும்கிறீங்க. சான்ஸே இல்ல.

ஒரு வார்த்தைக்குத் தாங்க அவர் பொண்டாட்டி பார்பரா "போய்யா பேமனி செருப்பால அடிவாங்கினீ தானே.." அப்பிடீன்னு ஒரே ஒரு தரம் சொல்லிட்டாலே ..எந்த முகமூடி போட்டு முகத்தை மறைப்பாரு நம்ம கெளபோய்... பாவமாயில்ல..நா ரொம்ப பீல் பண்ணுரேங்க..

No comments:

Post a Comment