Friday, March 27, 2009

நட்ராஜ் கிட்டேருந்து எஸ் எம்மெஸ்ஸூ


கல்யாணியில் சுகித்து கால்தடக்கி விழுந்து உறங்கிக்கொண்டிருந்த என்னை நம்ம சகா இடறி எழுப்பினான். போதையின் மயக்கம் சிதைந்த கோபம் கிளர்ந்து எழுந்தது.
"என்னாப்பா.."
"நட்ராஜூ அன்ணன் எஸ் எம்மெஸ்ஸூ.."
"எவண்டா அவன் பேமானி.."
கல்யாணியின் தழுவல் குலைந்ததில் எரிச்சல் ஏறிப்போயிருந்தது.

"நம்ம சசியக்கா ஹஸ்பண்ட் நட்ராஜ் அண்ணே"
"அடடே நாம கோபாலபுரம் போன கதை அவங்களுக்கும் தெரிஞ்சிடுத்தா..? என்னடா என்ன சொல்லுரார்.."

"காலைல சந்திக்க முடியுமான்னு கேட்கிராரு..''

"அடே அந்த சாவு கிராக்கிங்கள தொரத்திப் புடிக்கணும்டா காலைல.."

"அதும் முன்னாடி போய்ப்பார்க்கலாமா..? இல்லே போனில பேசிரீங்களா? .."

"சரி போனலயே கனக்ட்பண்ணுடா? "

"அலோ அண்ணாச்சி .." கலைந்திருந்த வேட்டியை இழுத்து சரிக்கட்டி எழுந்திருப்பற்கிடையில் மறு முனை கரகரத்தது.

"என்னாப்பா நம்மள கலந்துக்காம கோபாலபுரம் மட்டும் போயிருக்கீங்க..."

"அதொன்ணுமில்ல அண்ணாச்சி .. நீங்க நம்ம வை கோ அண்ணாச்சி எல்லாம் சேந்து டாக்குத்தரையாவை வளைச்சுப்போடுறதில மும்முரமா இருக்கீங்களா அதுதான்..." ஒருவிதமாக சமாளித்து தலையைச் சொறிந்தேன்.

"அதெல்லாம் ஒன்ணுமில்லப்பா .. நம்ம கூட்டணிதான் ஜெயிக்க்குமின்னு நம்ம மலையாள ஜோஸிசர் சோழி போட்டுப் பார்த்து சொல்லிப்புட்டாரு. அதும் இல்லாம ஈழத்தமிழரு போராட்டம் வெடிச்சு காங்கிரஸ் காரனை வீட்டுக்கு அனுப்புரதுன்னு நம்ம தமிழக ஜனங்களெல்லாம் கொந்தளிச்சுக்கிட்டிருக்கானுங்க... கலைஞரு கூட காங்கிரஸ்காரன் கூட்டு வைச்சிருக்கான்ல... அந்தக் கூட்டணி வீட்டுக்குப் போயிரும்னு நம்ம வை கோ அண்ணாச்சி அடிச்சு சொல்லிக்கிட்டிருக்காரு. அவரு சொன்ன படியே நம்ம புரட்சித்தலைவலியும்..ஈழத்தமிழர் சார்பா உண்ணாவிரதமிருந்தாங்க...அவரு கூட இருந்த டாக்குத்தரையாவையும் வளைச்சுப் போட்டாச்சு...."

"என்னா அண்ணாச்சி நம்ம புரட்சி தலைவியைப் பார்த்து இப்பிடியொரு வார்த்தை சொல்லிப்புட்டீங்க..?"

"அட தலைவலி நமக்கு மட்டும்தாம்பா.. இப்படித்தான் சமயம் தெரியாம வாயில வந்துடுத்து.... ஓவ் த ரெக்கோட் .. சரி என்ன சொல்ல வந்தேன்... நாம ஆட்சிக்கு வாரது ஹன்ரட் பர்சண்ட் நிஜமுங்க.... நம்ம புரட்சித்தலைவி உங்களக் கண்டாக்ட் பன்ணச் சொன்னது..."

சாவகாசமாக உட்கார்ந்திருந்த நான் திடும்னு எழுந்து நின்னேன். கால்ல விழண்ணும்னு பார்த்தா அம்மாதான் முன்னாடி இல்லையே...

புரட்சித்தலைவியே நம்மள கண்டாக்ட் பண்ணச்சொன்னாங்கன்னா...அவங்க விடுமுறை விடுமுறைன்னு சொல்லிப்போறது நம்மை மாதிரி உள்ளவங்க பதிவைப் படிக்கத்தான்னு இப்போ புரிந்தது. கலைஞர் மக்கள் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பது எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு என்று இப்போதல்லவா புரிகின்றது.
மக்கள் பிரச்சினையை இந்தப் "பதிவுகள்" தான் எடுத்துச் சொல்கின்றன என்று எப்படி மக்களின் நாடித்துடிப்பை புரிந்துகொண்டிருக்கின்றார். ஆச்சரியமாக இருக்கின்றதே.

பம்மிக்கொண்டு அண்ணாச்சி என்ன சொல்லப்போறாருன்னு காத்திருந்தேன்.

"நம்ம ஆட்சியில உங்களத்தான் அரசவைக் கவிஞராப்போடணும்கிறது...அம்மாவோட விருப்பம்.."

"அடடே அண்ணாச்சி இதுவென்ன விபரீதம்... கவிப்பேரரசு வைரமுத்து வகையறாக்கள் இதற்கென்றே கவிஞர்களாய் வலம் வந்து கொண்டிருக்க ..போயும் போயும் என்னை மாதிரி கவிதையே தெரியாத..'

"உஷ் அதெல்லாம் சொல்லப்படாது..அதெல்லாம் ஏன் சொல்லுறாய்..." கில்லி பிரகாஷ் ராஜ் போல என்னைப்பேச விடாது மிரட்டினார்.

"கவிதை தெரியாதவனையும் கவிஞர் ஆக்கிரதுதான் நம்ம புரட்சித்தலைவி ஸ்டைல்... இல்லேன்னா புரட்சித் தலைவியா இருந்து என்ன பயன்.." இறுதியாக ஒரு பிட்டுப் போட்டுவிட்டு போனை "டொக்"கின்னு வைத்து விட்டார்.

இதுக்காகவே இப்போ நம்ம வலைப் பதிவர் அண்ணாச்சி போல் கவுஜை எழுதப் பழகிக்கிட்டிருக்கேன்.

"ஆட்சியில் இருப்பது
அன்ணாவின் பேரில்
அடங்கி விழுவது
அம்மாவின் காலில்

தேர்தலில் வெல்வது
சண்டித் தனத்தில்
வென்றதில் கிடைப்பது
வண்டிக் கணக்கில்.."

இந்த வகையில் நம்ம கவுஜை முயற்சி தொடர்கின்றது.

எதற்கும் விடியட்டும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment